பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் டாக்டர் ஜாஹிர் நாயக்கின் ஆங்கில உரைகளை தமிழில் விசிடியாக கொண்டு வரும் பணியினை காயல்பட்டணம் இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் ) எனும் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இத்தகவலை வளைகுடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முஹம்மது தம்பி தெரிவித்தார்இதுவரை தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா ? மற்றும் இந்து சமயப் பிரமுகர் ரவிசங்கருடன் டாக்டர் ஜாஹிர் நாயக் நிகழ்த்திய உரை ஆகிய இரண்டு நிகழ்வுகள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு விசிடியினை தமிழாக்கம் செய்திட சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவு ஆவதாக முஹம்மது தம்பி தெரிவித்தார். இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் அமைப்பின் தலைவராக அபுல் ஹசன் கலாமி ஹாஜியாரும், செயலாளராக நவாஸ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.இதன் சார்பில் ஆயிஷா சித்திக்கா பெண்கள் அரபிக்கல்லூரி மற்றும் பைத்துல்மால் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.விசிடி தயாரிப்பில் உதவிட விரும்புவோர் அமீரகத்தில் தொடர்பு கொள்ளஜலாலுதீன் 050 614 2633இந்தியாவில் ......
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )141 கே.டி.எம். தெருகாயல்பட்டணம் 628 204தூத்துக்குடி மாவட்டம்94 871 24246
No comments:
Post a Comment